இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது
By: vaithegi Tue, 25 Apr 2023 2:50:58 PM
இந்தியா: ஒரு நாளில் 6,660 பேருக்கு கொரோனா உறுதி .... கொரோனா தொற்று தொடர்ந்து 3 பேரலைகளை ஏற்படுத்தி, மக்களை மிகப்பெரிய பயத்தில் ஆழ்த்தியது. கொரோனா தாக்கத்தின் விளைவால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்வை இழந்து பெரும் சிரமத்தில் இருந்தனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக தான் தொற்று பாதிப்பு குறைந்தது. இந்த நிலையில், ஏப்ரல் மாத ஆரம்பம் முதல் திடீரென்று நாடு முழுவதும் கொரோனாவின் உருமாறிய தொற்று வகை பாதிப்பு உறுதி செய்து வந்தது.
தொடர்ந்து 10,000 ஐ தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. இதனால் அனைத்து வித ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேர நிலவரப்படி, ஒரு நாள் தொற்று பாதிப்பு 6,660 ஆக குறைந்துள்ளது.
மேலும், 24 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 9,213 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோன்று, 63,380 பேர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.