Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்‌ , அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்‌ , அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 04 Jan 2023 5:44:00 PM

இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்‌ , அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது பனி காலமாக உள்ளது. இதனால், காலை வெகு நேரமாகியும் பனி மூட்டமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, ஜனவரி 4ம் தேதியான இன்று தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று ஜனவரி 5 மற்றும் 6ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவித்துள்ளது.

rainy,coastal districts , மழை,கடலோர மாவட்டங்கள்‌

இதனை அடுத்து மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்த 2 நாட்களிலும் இதே நிலை தான் நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌ என்றும், மீனவர்களுக்கு தனிப்பட்ட எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|