Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முழு ஊரடங்கு இல்லாததால் கடைகள் திறப்பு, வாகனங்கள் இயக்கம்

இன்று முழு ஊரடங்கு இல்லாததால் கடைகள் திறப்பு, வாகனங்கள் இயக்கம்

By: Nagaraj Sun, 06 Sept 2020 2:13:55 PM

இன்று முழு ஊரடங்கு இல்லாததால் கடைகள் திறப்பு, வாகனங்கள் இயக்கம்

இன்று ஊரடங்கு இல்லாததால் கடைகள் திறப்பு... தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அமுல்படுத்தப்பட்ட தளர்வில்லாத முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இன்று முதல் மீண்டும் வழக்கமான நடைமுறைப்படி அனைத்து கடைகளும் திறந்திருக்கும்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

vehicles,blocks,procedure,tamil nadu,shops,opening ,வாகனங்கள், தடுப்புகள், நடைமுறை, தமிழகம், கடைகள், திறப்பு

சென்னையில் கடந்த 8 ஞாயிற்றுக்கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் வழக்கமான நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

எனவே இன்று சென்னையில் அனைத்து வகையான கடைகளும் முழுமையாக திறக்கப்படுகின்றன. சாலைகளில் வழக்கம்போல வாகனங்கள் செல்வதற்காக தடுப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.

Tags :
|
|