Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது

இன்று சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது

By: vaithegi Mon, 31 July 2023 09:43:59 AM

இன்று சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது

சென்னை : சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்துறையினர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளது. எனவே இதன் காரணமாக அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,

வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் இன்று காலைகாலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்து உள்ளது.

water supply,chennai ,குடிநீர் விநியோகம்,சென்னை

ஆகையால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அத்துடன் அவசரத் தேவைகளுக்கு https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் எனவும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளில் குடிநீர்த் தொட்டி மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் விநியோகம் எவ்வித தடையுமின்றி, வழக்கம் போல மேற்கொள்ளப்படும் எனவும், மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளுக்கும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :