Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரியில் ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம்

குமரியில் ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம்

By: Monisha Wed, 30 Dec 2020 11:27:54 AM

குமரியில் ரே‌‌ஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன் விநியோகம்

குமரி மாவட்டத்தில் 5½ லட்சம் ரே‌‌ஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களில் 5 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் அனைத்துக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் ரூ.1000 வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.2,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பொருட்கள் மற்றும் பணம் வருகிற 4-ம் தேதி முதல் ரே‌‌ஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. 4-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்புகள் மற்றும் பணம் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப்பணி வருகிற 11-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. விடுபட்டவர்கள் 13-ம் தேதி ரே‌‌ஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ration card,rice,pongal gift,token,distribution ,ரே‌‌ஷன் அட்டை,அரிசி,பொங்கல் பரிசு,டோக்கன்,விநியோகம்

ரே‌‌ஷன் கடை ஊழியர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாகச் சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ரே‌‌ஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும்போதும் மக்கள் டோக்கன்களை வாங்கிச் செல்கிறார்கள். இதனால் சில கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்தவர்களுடன் வரிசையில் நின்று டோக்கன் வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது.

வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது முறையாக அனைவருக்கும் டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதா அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டதா என்பதை மக்களிடமும், கடை ஊழியர்களிடமும் கேட்டறிந்தார்.

Tags :
|
|