Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக பிரமுகர் தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்நிலையத்தில் முற்றுகை

திமுக பிரமுகர் தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்நிலையத்தில் முற்றுகை

By: Nagaraj Sat, 24 June 2023 8:40:50 PM

திமுக பிரமுகர் தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் காவல்நிலையத்தில் முற்றுகை

வேலூர்: காவல் நிலையம் முற்றுகை... திமுக பிரமுகர் ஒருவர் தங்களை தாக்கியதாகக் கூறி வேலூர் அருகே உள்ள சுங்கச்சாவடி ஒன்றின் ஊழியர்கள் தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வேலூர் - ஆரணி சாலையில் வல்லம் என்ற இடத்தில் அந்த டோல்கேட் உள்ளது. அணைக்கட்டு பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மணிமாறன் அவ்வழியாக வேலூருக்கு சென்ற போது டோல் பிளாசாவில் இருசக்கர வாகனங்கள் செல்லும் ஃப்ரீ லேனில் சென்றதாகத் தெரிகிறது.

tollgate,taluka,argument,customs staff ,டோல்கேட், தாலுகா, வாக்குவாதம், சுங்கச்சாவடி ஊழியர்கள்

அப்போது டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் செலுத்தும் வழியாக வருமாறு கூறியதாகவும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திமுக பிரமுகர் மணிமாறன் தங்களை தாக்கியதாகவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து ஊழியர்கள் அனைவரும் டோல்கேட் விட்டு வெளியேறி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Tags :
|