Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தக்காளி காய்ச்சல் .. கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

தக்காளி காய்ச்சல் .. கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

By: vaithegi Sun, 21 Aug 2022 10:39:45 AM

தக்காளி காய்ச்சல்   .. கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது ..  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு

வேலூர்: கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை மட்டும் 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இது சுகாதாரத்துறை அதிகாரிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ma. subramanian,tomato fever ,மா.சுப்பிரமணியன்,தக்காளி காய்ச்சல்

இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 27 லட்சம் வரையிலும் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இதனை தொடர்ந்து 18 வயதை கடந்தவர்களில் 96.99% பேர் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Tags :