தக்காளி விலை இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்வு
By: vaithegi Thu, 27 July 2023 09:59:29 AM
சென்னை:அதிரடியாக உயர்ந்தது தக்காளி விலை ... வட மாநிலங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் அத்துடன் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களிலிருந்தும் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதால் , அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனை அடுத்து கடந்த 3 நாட்களாக சென்னையில் தக்காளியின் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று 110 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று ஒரே நாளில் 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ. 110க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.30 உயர்ந்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளில் 1 கிலோ தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கோயம்பேடு சந்தையில் 1100 டன் தக்காளி தேவை உள்ள நிலையில் தினசரி 800 டன் வரத்து குறைந்து 300 டன் தக்காளி மட்டுமே வருவதால் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று 1 கிலோ இஞ்சி 250 ரூபாய்க்கும் ,சின்ன வெங்காயம் கிலோ 150க்கும் விற்பனையாகிறது.