Advertisement

தக்காளியின் விலையானது மீண்டும் அதிகரிப்பு

By: vaithegi Sat, 01 July 2023 10:13:59 AM

தக்காளியின் விலையானது மீண்டும் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தக்காளி சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. தக்காளி விளைச்சலும், வரத்தும் அதிகரிக்கும் போது தக்காளியின் விலை குறைந்து காணப்படும். தக்காளியின் விளைச்சல் , வரத்து குறையும் போது தக்காளி விலை உச்சத்தை பெறுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் என்பது தற்போது குறைந்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வர வேண்டிய தக்காளி வெகுவாக குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இதன் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ₹40 இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது 100 ரூபாயை எட்டி உள்ளது.

tomato,cultivation , தக்காளி,சாகுபடி

இதையடுத்து இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளியை கொள்முதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டு வருகிறது. இந்த சூழலில் நேற்று தக்காளி கிலோ ₹20 குறைந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபார கடையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி 120 முதல் 130 வரை விற்பனை ஆகிறது. தொடர்ந்து 10 நாட்களுக்கு தக்காளி விலை உயர்வு இருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|