தக்காளி விலை உயர்ந்தது
By: vaithegi Wed, 14 Dec 2022 10:35:40 AM
ஈரோடு : விலை உயர்ந்தது .... ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு கொண்டு வருகிறது. இதனை அடுத்து இந்த மார்க்கெட்டுக்கு கிருஷ்ணகிரி, ஆந்திரா, தாளவாடி, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும் 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.
இதையடுத்து இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கள் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.
எனவே இதன் எதிரொலியாக காய்கறிகளின் விலையும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. ஈரோடு மார்க்கெட்டிற்கு நேற்று கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து 1,500 பெட்டிகள் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.
இதனையடுத்து வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்தது. கடந்த வாரம் ரூ.10-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.25-க்கு விற்பனை ஆனது.