Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெல்லையில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பணி .. மின் விநியோகம் நிறுத்தம்

நெல்லையில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பணி .. மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Fri, 19 Aug 2022 11:04:37 AM

நெல்லையில் நாளை (ஆகஸ்ட் 20) மாதாந்திர பணி ..  மின் விநியோகம் நிறுத்தம்

நெல்லை: நெல்லையில் பாளை மற்றும் மேலப்பாளையம் துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே அதன்படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர்

power supply outage,nellie ,மின் விநியோகம் நிறுத்தம் ,நெல்லை

இதை அடுத்து அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம், பொதிகைநகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), அன்பு நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி,

மேலும் சாந்திநகர், திம்மராஜபுரம். சமாதானபுரம், கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி போன்ற பகுதிகளில மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளன்குளத்தில் மின்வினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :