Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (ஆகஸ்டு 30) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை (ஆகஸ்டு 30) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Mon, 29 Aug 2022 7:25:52 PM

நாளை (ஆகஸ்டு 30) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி ..  மின்தடை

திருவாரூர் : நாளை (ஆக.30) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த பராமரிப்பு பணிக்காக துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்படுகிறது.

எனவே அதன்படி நாளை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மின்வாரிய செயற்பொறியியலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

power outage,tiruvarur ,மின்தடை ,திருவாரூர்

இதை தொடர்ந்து குடவாசல் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்துடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின் விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags :