Advertisement

புதுச்சேரியில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 09 Dec 2022 12:34:04 PM

புதுச்சேரியில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறி உள்ளது.இதையடுத்து இப்புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக வலுவடைந்து மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் வட தமிழகம், புதுச்சேரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அதனால் புயல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

puducherry,vacation,school,college ,புதுச்சேரி,விடுமுறை , பள்ளி , கல்லூரி

அந்த வகையில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து இந்த அறிவிப்பில் மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|