Advertisement

தெலுங்கானாவில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Sun, 17 July 2022 12:05:08 PM

தெலுங்கானாவில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தெலுங்கானா: தற்போது இந்தியா முழுவைத்தும் பருவமழை காலம் என்பதால் பல மாநிலங்களில் அதிக மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கூடுதல் கனமழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதி முழுக்கவே மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தெலுங்கானா மாவட்டத்திலேயே பூபாலப்பள்ளி மாவட்டத்தில் தான் அதிக அளவில் மழைப்பொழிவின் அளவு பதிவாகி உள்ளது. மேலும், தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் அதிக அளவில் மழை பொழிவு இருந்து கொண்டு வருகிறது.

holiday,telangana ,விடுமுறை,தெலுங்கானா

இதை அடுத்து தமிழகத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 11ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்னும் 2 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி வரைக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அரசு அறிவித்திருந்த விடுமுறை நாட்கள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மழையின் அளவு குறைவதாக தெரியவில்லை.

இதனால் கூடுதலாக பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என தெலுங்கானா மாநில முதல்வர் அவர்கள் அறிவித்துள்ளார்

Tags :