இந்த மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
By: vaithegi Thu, 08 Dec 2022 2:59:24 PM
வேலூர் : தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தற்போது மாண்டாஸ் புயல் உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று வலுப்பெற்று புயலாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
எனவே அதன்படி இன்று புயலாக உருவெடுத்துள்ளது. இப்புயலின் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மேலும் சூறாவளி காற்று அதி வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்திலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நான் கருதி வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் மற்றும் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் விடுமுறையை அறிவித்துள்ளார்.