Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடியில் நாளை இந்த நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் நாளை இந்த நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Tue, 21 Feb 2023 6:39:22 PM

தூத்துக்குடியில் நாளை இந்த நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி : தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட காயல்பட்டினம் கடற்கரை சாலையில் இருக்கும் பழமை வாய்ந்த மஜ்லிஸ் புகாரி ஷரீப் சபையின் 96-ம் ஆண்டு விழா கடந்த 1 மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் அமைதி மற்றும் நலனுக்காக சிறப்பு பிராத்தனை இங்கு நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்த பிராத்தனையில் வெளி மாவட்டங்களிலிருந்தும் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

holiday,thoothukudi ,விடுமுறை,தூத்துக்குடி

இதில் குறிப்பாக தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவார்கள்.

இதனை தொடர்ந்து, நாளை மறுநாள் காலை 6 மணி முதல் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

அதனால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் காயப்பட்டிணம் நகராட்சியில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவர்கள் அறிவித்துள்ளார்

Tags :