Advertisement

கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 30 May 2023 1:33:19 PM

கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

கரூர் : கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் நாளை அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் நாளை உள்ளூர் விடுமுறை ... உலகப் புகழ்பெற்ற கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கமான ஒன்று

இதையடுத்து கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்வர். அந்த வகையில் இந்தாண்டு அருள்மிகு மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த மே 14ஆம் தேதி முதல் துவங்கி வருகிற ஜூன் 11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

local holiday,karur , உள்ளூர் விடுமுறை ,கரூர்

மேலும், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. மேலும், அமராவதியை ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியை காண பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், நாளை மட்டும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என கருர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்து உ ள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதமாக வரும் ஜூன் 3-ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tags :