நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
By: vaithegi Thu, 18 May 2023 3:20:06 PM
நீலகிரி : நாளை முதல் வரும் மே 23ஆம் தேதி வரைக்கும் மலர் கண்காட்சி நடைபெற இருப்பதால் நாளை மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ..... தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களில் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கோடை காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் மே மாதத்தில் இது போல மலை பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர்.
அதே போன்று, இந்தாண்டும் நீலகிரி மாவட்டம் உதகையில் பொதுமக்களை கவர்வதற்காக வரும் மே 19-ம் தேதி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
மேலும், இந்தாண்டு தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததனால் ஊட்டியில் அனைத்து மலர்களும் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கிறது. இதனால், கடந்தாண்டு விட இந்தாண்டு மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தாவரவியல் பூங்காவில் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சி மே 19ஆம் தேதி முதல் மே 23 தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மலர் கண்காட்சி தொடங்கும் முதல் நாளான நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.