Advertisement

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 03 Mar 2023 7:55:03 PM

நாளை இந்த  4 மாவட்டங்களுக்கு  உள்ளூர் விடுமுறை

சென்னை: அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ... சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் ஒருவர் அய்யா வைகுண்டர்.

இதையடுத்து ஆண்டுதோறும் இவரது அவதார தினம் பக்தர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு அய்யா வைகுண்டரின் 191 – வது அவதார தினம் மார்ச் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

local holiday,nellie,tenkasi,kanyakumari,thoothukudi , உள்ளூர் விடுமுறை,நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி

எனவே இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பதியில் பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாளை கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து வைகுண்ட தீப நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அடுத்தாக நாகராஜா கோவில் திடலிருந்து ஊர்வலம் நடைபெறும்.

இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அய்யா வழி மக்கள் பங்கேற்பார்கள். இதனை முன்னிட்டு நாளை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|