Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவகங்கை மாவட்டத்தில் நாளை இந்த தாலுகாக்கா பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை இந்த தாலுகாக்கா பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 26 Oct 2022 2:27:18 PM

சிவகங்கை மாவட்டத்தில் நாளை இந்த தாலுகாக்கா  பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை

சிவகங்கை : நாளை உள்ளூர் விடுமுறை .... சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக். 27 ஆம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினம் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு மருதுசகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் அக். 23 முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக். 24ஆம் தேதி அரசு சார்பில் நினைவு தினமும், 27ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறும்.

local holiday,sivagangai ,உள்ளூர் விடுமுறை ,சிவகங்கை

இதையடுத்து இந்த நிலையில் நாளை (அக். 27) மருதுசகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன் படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 27) விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tags :