Advertisement

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 05 Jan 2023 2:24:26 PM

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் : தமிழகம் முழுவதும் அல்லாமல் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகளுக்கு என தனியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ராமநாதபுரத்தில் உள்ள திருஉத்திரகோசமங்கையில் உள்ள ஸ்ரீ மங்காளநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றது.

இந்த கோயிலில் உள்ள மூலவர் பச்சை மரகத சிலையால் செய்யப்பட்டது. இதனால் வருடம் முழுவதும் சிலைக்கு சந்தனம் பூசப்பட்டு வழிபாடுகள் செய்யப்படும். இந்த விழாவின் போது தான் பழைய சந்தன காப்பு களையப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படும்.

local holiday,ramanathapuram ,உள்ளூர் விடுமுறை ,ராமநாதபுரம்

இதனை அடுத்து இன்று சந்தனம் களைதலும், நாளை சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள்.

இதனால் மாவட்ட ஆட்சியர், அதிக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :