Advertisement

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 31 Mar 2023 1:35:05 PM

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவாரூர் : தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பணிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மேலும் பக்தர்கள் எளிதில் வருவதற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதவது, மாவட்டத்தில் தேரோட்ட திருவிழாவை பாதுகாப்பான முறையில் நடத்திட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

local holiday,tiruvarur ,உள்ளூர் விடுமுறை,திருவாரூர்

இதில் குறிப்பாக, தேரோடும் வீதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள், பாதுகாப்பு பணிகளுக்கு சீருடை மற்றும் சீருடை இல்லாமல் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு நாளை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :