Advertisement

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

By: vaithegi Mon, 17 Apr 2023 1:03:14 PM

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு திருத்தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. எனவே இந்த விழாவை காண வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர்.

இதனை முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் மற்றொரு புகழ்பெற்ற திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

local holiday,trichy ,உள்ளூர் விடுமுறை ,திருச்சி

இதில் பக்தர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த விடுமுறையை ஈடு செய்யும் ஆகியில் ஏப்ரல் 29 மற்றும் மே 13-ம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என தாக்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது தேர்வு நடைபெற்று வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

Tags :