Advertisement

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sun, 30 July 2023 3:14:13 PM

நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சங்கரன்கோவில் திருவிழாவையொட்டி வருகிற ஜூலை 31 -ம் தேதி ஆகிய நாளை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை ..உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடந்து கொண்டு வருகிறது.

இதயத்து திருவிழாவின் முக்கிய நாளான ஆடித்தபசு விழா நடப்பு ஆண்டில் வருகிற ஜூலை 31-ம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்த தினத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வருவார்கள்.

local holiday,tenkasi,darshan ,உள்ளூர் விடுமுறை,தென்காசி ,தரிசனம்

இதனால் அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளாக ஜூலை 31ஆம் தேதி ஆகிய நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி நாளை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாகவும், மேலும் திட்டமிட்டபடி போட்டி தேர்வுகள் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெறும்.

அதனால் மாநில அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :