விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
By: vaithegi Fri, 21 July 2023 09:32:24 AM
விருதுநகர் : வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பிப்பு .... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும் .
இதனை அடுத்து இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் பிறந்த தினத்தில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும்.
பெரியாழ்வார், ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரிய இந்த திருத்தலத்தில் ஆடிப்பூ தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று.
எனவே இதற்காக கடந்த 14 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா நாளை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு வருகிற 22ம் தேதி (சனிக்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.