Advertisement

திண்டுக்கலில் நாளை உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 06 Sept 2022 10:04:16 PM

திண்டுக்கலில் நாளை உள்ளூர் விடுமுறை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படுகிறது. அத்துடன் இக்கோவிலானது 400 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தாக விளங்குகிறது. இந்த கோவிலில் நாளை குடமுழுக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி பாலாலய பூஜைகள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நத்தம் மாரியம்மன் கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 11 முதல் 12 மணிக்குள் நடைபெற உள்ளது. அதனால் இந்த தினத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

local holiday,dindigul , உள்ளூர் விடுமுறை ,திண்டுக்கல்

இதனையடுத்து இந்த குடமுழுக்கு விழாவில் உள்ளூரில் உள்ள பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக வருகிற அக்டோபர் 1ம் தேதி அன்று வேலை நாளாக நடத்தப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :