நாளை பஞ்சாப் முழுவதும் பொது விடுமுறை
By: vaithegi Mon, 22 May 2023 3:11:11 PM
பஞ்சாப் : மாநிலத்தில் சிறப்பிக்கப்படும் முக்கிய தினம் காரணமாக அரசு அலுவலகங்களை பொது விடுமுறை அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாட்டின் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும், நலனிற்காக்கவும் உழைத்தவர்களின் முக்கிய தினங்களை சிறப்பிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அந்தவகையில், சீக்கிய மதத்தின் 5- வது குருவான குரு அர்ஜுன் தேவ் தினம் ஆண்டுதோறும் மே 23-ம் தேதி அன்று அதாவது நாளை அனுசரிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு இந்த தினத்தை முன்னிட்டு நாளை பஞ்சாப் (சண்டிகர்) முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்/போர்டுகள்/கார்ப்பரேஷன்கள்/நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அளிக்கப்பட்டு உள்ளது.