குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் .. டி.என்.பி.எஸ்.சி தெரிவிப்பு
By: vaithegi Sun, 21 Aug 2022 11:38:43 AM
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சித்துறை), ஆகிய பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நாளை (22.08.2022) இறுதி நாள் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து அதன் பின்னர் அந்த சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இதையடுத்து விண்ணப்பங்களில் ஏதேனும் பிழை இருப்பின் அதனை திருத்தம் காலஅவகாசம் தரப்பட்டுள்ளது
எனவே அதன்படி ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.