நாளை (நவ.11) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By: vaithegi Thu, 10 Nov 2022 6:47:15 PM
திருவள்ளூர் : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ... தமிழகம் முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்து வரும் வேளையில் நேற்று தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அந்த பகுதி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை (நவ.11) தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் எனவே இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு அநேக இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும்.அத்துடன் நவ.11,12ம் ஆகிய இரு தினங்களுக்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு நாளை (நவ.11) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை குறித்த அறிவிப்பை அந்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.