Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (அக்.13) மதுரையில் இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்

நாளை (அக்.13) மதுரையில் இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்

By: vaithegi Wed, 12 Oct 2022 7:01:33 PM

நாளை (அக்.13) மதுரையில் இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்

மதுரை: மின்சாரம் தடை ... மதுரையில் திருப்பாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

power outage,madurai ,மின்தடை ,மதுரை

இதனை தொடர்ந்து திருப்பாலை துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெற்று பயன்பெறும் பகுதிகளான, ஆத்திகுளம், திருப்பாலை, நாராயணபுரம், குலமங்கலம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, உச்சபரம்புமேடு, கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், பாமாநகர், பார்க்டவுன், தபால் தந்தி காலனி ஆகிய பகுதிகளிலும்

மேலும் குடிநீர் வடிகால் வாரிய காலனி, பம்பா நகர், பொறியாளர் நகர், விஜய் நகர், சொக்கிகுளம், சண்முகாநகர், இ.பி.காலனி, கலைநகரின் சில பகுதிகள், மீனாட்சி நகர் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி மின் விநியோகம் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :