Advertisement

நாளை (அக்.15) இந்த இடங்களில் மின்சாரம் நிறுத்தம்

By: vaithegi Fri, 14 Oct 2022 2:11:32 PM

நாளை (அக்.15) இந்த இடங்களில்  மின்சாரம் நிறுத்தம்

தென்காசி : மின்சாரம் நிறுத்தம் ... நாளை மாவட்டத்தில் கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இப்பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மின்சாரம் விநியோகிக்கப்படும்.

எனவே அதன்படி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

electricity,south kashmir ,மின்சாரம் ,தென்காசி

இதனை தொடர்ந்து விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான வடக்கு சத்திரம், தெற்கு சத்திரம், விஸ்வநாதப்பேரி, வடுகபட்டி, மேலகரிசல்குளம், ராயகிரி, தேவிபட்டணம், சிவகிரி, வழிவழிகுளம், கொத்தாடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும்

மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags :