Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப். 15) கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி... மின்சாரம் இருக்காது

நாளை (செப். 15) கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி... மின்சாரம் இருக்காது

By: vaithegi Thu, 15 Sept 2022 6:23:16 PM

நாளை (செப். 15) கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி...    மின்சாரம் இருக்காது

கோவில்பட்டி : 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படுவதால் அடிக்கடி மின்சார பராமரிப்பு பணிகள் செய்வது கட்டாயமாகும். எனவே அந்த வகையில் மாதந்தோறும் குறிப்பிட்ட உபமின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.அதனால் மின்சாரம் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்படுகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்களையும் மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவிக்கின்றன.

இதை அடுத்து அதன்படி நாளை (செப். 15) கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் அந்த மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் நாளை காலை முதல் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

maintenance work.,electrical , பராமரிப்பு பணி.,மின்சாரம்

அதன் படி கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம் துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி உபமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் தெரிவித்துள்ளார். அதனால் அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :