Advertisement

நாளை (செப்.27) இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Mon, 26 Sept 2022 12:23:39 PM

நாளை (செப்.27) இந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்

திருச்சி ; திருச்சி மாவட்டம் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட 10 துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை செப். 27 நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் படி குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, கொசூர், நச்சலூர், வல்லம், தோகைமலை ஆகிய பகுதிகளிலும்

இதனை தொடர்ந்து மாயனூர், சிந்தாமணிபட்டி,பஞ்சப்பட்டி, பாலவிடுதி மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் நாளை ( செப். 27) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

power outage,trichy ,மின் விநியோகம் நிறுத்தம் ,திருச்சி

அது மட்டுமில்லாமல் இந்த 10 துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், மின்தடைக்கு தகுந்தாற் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மின் தேவை இருப்பின் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது பற்றி அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.


Tags :