Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப்டம்பர் 3) திருநெல்வேலியில் மின் விநியோகம் நிறுத்தம்

நாளை (செப்டம்பர் 3) திருநெல்வேலியில் மின் விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Fri, 02 Sept 2022 4:37:23 PM

நாளை (செப்டம்பர் 3) திருநெல்வேலியில் மின் விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி: நாளையில் தண்டையார்குளம் காற்றாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக நாளை தண்டையார்குளம் காற்றாலை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

எனவே அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அதனால் கீழ்கண்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

power distribution,tirunelveli ,மின் விநியோகம் , திருநெல்வேலி

இதை தொடர்ந்து தண்டையார்குளம் காற்றாலை துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான தண்டையார்குளம், சுண்டவிளை, கும்பிளம்பாடு, விநாயகபுரம், புஷ்பவனம், சைதம்மாள்புரம், கடம்பன்குளம், வேப்பிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும்

மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வழக்கம் போல மின்சாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :