நாளை (செப்.8) ஓணம் பண்டிகை ... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
By: vaithegi Wed, 07 Sept 2022 9:30:26 PM
சென்னை: தமிழகத்தில் கேரளா மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் பண்டிகையை கொண்டாட செப்டம்பர் 8ம் தேதி தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து முதலில் சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மட்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தற்போது 9 மாவட்டங்கள் அதாவது மேற்கண்ட மாவட்டங்களுடன் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு 9 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறையை அளித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.