Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை மதுரையில் எல்லீஸ் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

நாளை மதுரையில் எல்லீஸ் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்தடை

By: vaithegi Tue, 09 Aug 2022 7:52:08 PM

நாளை மதுரையில் எல்லீஸ் நகரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி  .. மின்தடை

மதுரை: தமிழகத்தில் நாளை மதுரையில் உள்ள எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அதனால் நாளை இந்த துணை மின் நிலையத்தால் பயன்பெறும் பகுதிகளான கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள் ஆகிய பகுதிகளிலும்

இதனைத்தொடர்ந்து டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பிஹோம் 1 மற்றும் 2வது தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,madurai ,மின்தடை ,மதுரை

மேலும், எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தால் பயன்பெறும் பகுதிகளான, எல்லீஸ்நகர் மெயின்ரோடு, ஹவுசிங்போர்டு, குடிசை மாற்று வாரிய வீடுகள், போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள்புரம்.

இதையடுத்து அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுந்தரா அபார்ட்மெண்ட்ஸ்,பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :