Advertisement

நாளை இந்த பகுதிகளில் பவர் இருக்காது

By: vaithegi Wed, 15 Mar 2023 11:48:31 AM

நாளை  இந்த பகுதிகளில் பவர் இருக்காது

சென்னை: தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த பணிகள் நிறைவடையும் வரை அத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பராமரிப்பு பணிகள் மற்றும் மின் விநியோகம் தடை குறித்த விவரங்கள் பயனர்களின் நலன் கருதி முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்து பொதுமக்கள் மின் தொடர்பான முக்கிய பணிகளை ஒரு நாள் முன்பாகவே முடித்து விடுகின்றனர்.

power,electricity,maintenance works ,பவர் ,மின்சாரம் ,பராமரிப்பு பணிகள்

அந்த வகையில் நாளை (மார்ச் 16) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகிவுள்ளது.

தர்மபுரி: தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், நென்மேனி: நென்மேனி, இருக்கன்குடி, கொசுகுண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.

இதனை அடுத்து அப்பநாயக்கன்பட்டி : சிறுகுளம், வீரார்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மின் விநியோகம் தடை ஏற்படும்.

Tags :
|