Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

நாளை பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

By: vaithegi Tue, 20 Sept 2022 7:08:39 PM

நாளை பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை

சென்னை:தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளளின் போது, மின் பாதைகள், மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையத்தின் உபகரணங்களில் உள்ள பழுதுகள் நீக்கப்படுகிறது.எனவே இதன் மூலம் மாதம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், செப்டம்பர் 21ம் தேதியான நாளை ( புதன்கிழமை) பெரியகுளம் கோட்ட பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியத்தில் பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் ப.பாலசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

dam,large pond ,மின்தடை ,பெரியகுளம்

இதனால் பெரியகுளம் கடமலைக் குண்டு துணை மின் நிலையத்தின் கடமலைக்குண்டு, ராஜேந்திராநகர், மயிலாடும்பாறை, பாலூத்து, வருசநாடு, துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, அருகவெளி, நரியூத்து, வாலிப்பாறை, சிறைப்பாறை, குமணன்தொழு, மந்திச்சுனை ஆகிய பகுதிகளும்

மேலும் தங்கம்மாள்புரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும்.

Tags :
|