நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாவட்டத்தில் மின்தடை
By: vaithegi Thu, 29 Sept 2022 6:21:58 PM
சென்னை: தமிழகத்தில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் இயந்திரங்கள் அனைத்திலும் பழுது நீக்குதல் மற்றும் தேவையற்ற மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக குறிப்பிட்ட மணி நேரம் மட்டும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் நாளை (செப்.30) குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி, செப்டம்பர் 30ம் தேதியான நாளை மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் வாடிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இதையடுத்து இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான மதுரை திண்டுக்கல் பைபாஸ் ரோடு,கரடிகல், டி.மேட்டுப்பட்டி, தெத்தூர், ராம கவுண்டன்பட்டி, வலையபட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, மறவர்பட்டி ஆகிய பகுதிகளிலும்
மேலும், தாதம்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வி.எஸ்.நகர், பாலமரத்தான் நகர், பழனியாண்டவர் கோவில் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.