Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை: கனடா உறுதி

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை: கனடா உறுதி

By: Nagaraj Tue, 08 Aug 2023 07:19:06 AM

காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை: கனடா உறுதி

கனடா: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கனடா அரசு உறுதி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது. தங்கள் மண்ணில் இருந்து இந்தியாவுக்கு எதிரான வன்முறைச் செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

khalistan,terrorists,operation,canada,india,demand ,காலிஸ்தான், பயங்கரவாதிகள், நடவடிக்கை, கனடா, இந்தியா, கோரிக்கை

இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டி காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வீடியோ வெளியிட்டதையடுத்து பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கனடா அரசுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதே போல் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஒடுக்க இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags :
|
|