சாலையில் சாவகாசமாக உலா வரும் காட்டுமாடுகளால் சுற்றுலாப்பயணிகள் அச்சம்
By: Nagaraj Fri, 29 Sept 2023 10:48:26 PM
கொடைக்கானல்: நடுச்சாலையில் உலா வந்த காட்டு மாடு... கொடைக்கானலில் நடுச்சாலையில் கன்றுடன் உலாவந்த காட்டு மாடுகளைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
கொடைக்கானல் ஏரிச்சாலையில் காட்டு மாடு ஒன்று கன்றுடன் சுற்றியதால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஏரிச்சாலையில் இரண்டு காட்டு மாடுகள் சுற்றி வந்ததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அச்சத்துடன் சாலையிலேயே நிறுத்தினர்.
அரைமணி நேரம் போக்குக்காட்டிய காட்டு மாடுகளை, உள்ளூர்வாசிகள் அங்கிருந்த தனியார் தோட்டப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
Tags :
tourists |