Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போட்ஸ்வானாவில் யானைகள் மரணங்களுக்கு விஷ பாக்டீரியா தான் காரணம் என தகவல்

போட்ஸ்வானாவில் யானைகள் மரணங்களுக்கு விஷ பாக்டீரியா தான் காரணம் என தகவல்

By: Karunakaran Tue, 22 Sept 2020 3:11:33 PM

போட்ஸ்வானாவில் யானைகள் மரணங்களுக்கு விஷ பாக்டீரியா தான் காரணம் என தகவல்

உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா என்ற ஆப்பிரிக்க நாடு முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 330 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்தனர்.

யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை ஆகையால் இவை வேட்டையாடப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பரவலான கருத்து நிலவின.

toxic bacteria,elephant deaths,botswana,africa ,நச்சு பாக்டீரியா, யானை இறப்பு, போட்ஸ்வானா, ஆப்பிரிக்கா

சில யானைகள் பாதை தெரியாமல் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியை தொடர்ந்து சுற்றிக்கொண்டே கிழே விழுந்து உயிரிழந்தன. இதனால் உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாவே, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியானது.

இதில் சயனோ பாக்டீரியா என்ற ஒருவகை நச்சுத்தன்மை உடைய பாக்டீரியா மூலமாகவே யானைகள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. தேங்கி கிடக்கும் தண்ணீரை யானைகள் குடித்ததால் பாக்டீரியா கிருமி மூலம் நோய் தொற்று ஏற்பாட்டு இயற்கையான நச்சு மூலமாகவே யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தேங்கிக்கிடக்கும் அதே தண்ணீரை குடித்த மற்ற உயிரிழங்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை ஏற்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :