சென்னையில் வரும் ஞாயிற்று கிழமை போக்குவரத்து மாற்றம்
By: vaithegi Fri, 06 Jan 2023 6:31:16 PM
சென்னை: போக்குவரத்து மாற்றம் .... தமிழகத்தில் அவ்வப்போது ஒரு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மாரத்தான் போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், சாலை மராமத்து பணிகள், போராட்டம் போன்றவை நிகழும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரங்கள் சாலைகள் ஸ்தம்பித்து விடும். எனவே இதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் சாலை போக்குவரத்தில் முக்கிய சில மாற்றங்களை அறிவிப்பார்கள்.
அவ்வாறு, தற்போது ஜனவரி 8ம் தேதி அன்று சென்னை Runners மாரத்தான் நெடுந்தூர ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு நேப்பியர் பாலத்தில் தொடங்கி, 9 மணிக்கு இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது.
இதனால், சென்னை மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் தாம்பரம் போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளார். எனவே அதன்படி, சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் திரும்பி செம்மொழி சாலை வழியாக செல்ல வேண்டும்.
மேலும் ராஜீவ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வலதுபுற சாலையில் செல்ல வேண்டும். மேடவாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.