Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

நாளை முதல் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

By: vaithegi Tue, 10 Oct 2023 09:52:28 AM

நாளை முதல் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதவது, அண்ணாசாலையில் வாகனங்கள் எளிதாக செல்ல வேண்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. நாளை 10.10.2023 முதல் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது 1.ஸ்மித் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. அண்ணா சாலை x ஸ்மித் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

இதனை அடுத்து ஒயிட்ஸ் சாலை x ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதி இல்லை பட்டு உள்ளாஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. ஒயிட்ஸ் சாலை அண்ணா x பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பிலிருந்து அண்ணாசாலை செல்லலாம். சாலை X பட்டுள்ளாஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை செல்ல அனுமதி இல்லை.

transport,chennai anna road ,போக்குவரத்து ,சென்னை அண்ணா சாலை

ஜி.பி.ரோடு சந்திப்பு மற்றும் பின்னி சாலையிலிருந்து அண்ணாசாலை வந்து ஒயிட்ஸ் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக ஸ்மித் ரோடு சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி ஸ்மித் ரோடு, ஒயிட்ஸ் ரோடு சென்று தங்கள் இலக்கை அடையலாம். இராயப்பேட்டை மணிகூண்டு சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை.

மேலும் திரு.வி.க. ஒயிட்ஸ் ரோடு சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் ரோட்டில் வந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்மித் ரோடு வழியாக செல்ல அனுமதி இல்லை. நேராக பட்டுல்லாஸ் சாலை சந்திப்பு சென்று இடதுபுறமாக திரும்பி பட்டுல்லாஸ் சாலை, அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம். அண்ணாசாலை X பட்டு உள்ளாஸ் சாலை சந்திப்பில் இருந்து பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி அண்ணாசாலையில் ஸ்பென்சர் எதிர்புறம் உள்ளே U வளைவில் திரும்பி பின்னிசாலை மற்றும் பிராட்வே நோக்கி செல்லலாம்.எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :