Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதால் போக்குவரத்து நெரிசல்

மக்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதால் போக்குவரத்து நெரிசல்

By: vaithegi Wed, 25 Oct 2023 09:16:41 AM

மக்கள் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புவதால் போக்குவரத்து நெரிசல்

சென்னை: போக்குவரத்து நெரிசல் ... ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் வாகனங்கள் சென்னைக்கு செல்ல தொடங்கி உள்ளன.

இதனால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

traffic jam,chennai ,போக்குவரத்து நெரிசல் ,சென்னை


இதேபோன்று திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். மேலும் இரவு முழுவதும் வாகனங்கள் செல்லும் என்பதால் மாவட்ட காவல் துறை சார்பாக திருச்சி, சேலம், போன்ற பல்வேறு ஊர்களிலிருந்தும் சென்னைக்கு செல்லும் வாகனங்கள் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டுக்கு 2 கிலோ மீட்டருக்கு முன்பாக செண்டூர்,

மேலும் மயிலம் வழியாகச் சென்று தென்கோடி பாக்கம்- புதுவை தேசிய நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம் வந்து சென்னைக்கு செல்ல போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags :