- வீடு›
- செய்திகள்›
- பள்ளிகள் திறப்பு ..... சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களால் சென்னை வழித்தடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பள்ளிகள் திறப்பு ..... சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்களால் சென்னை வழித்தடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
By: vaithegi Mon, 13 June 2022 10:00:20 AM
சென்னை: தமிழகத்தில் இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
எனவே, கோடை விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் அனைவரும் நேற்று சென்னைக்கு திரும்பினர்.கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் இருந்து கார்கள், பேருந்து என வாகனங்களில் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்ததால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயான 35 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வாகனங்களுக்கு இரண்டரை மணி நேரம் ஆனது.மேலும், பரனூர் சுங்கச்சாவடியை கடக்க வாகனங்களுக்கு 15 நிமிடங்கள் வரை ஆனது.
ஒருசிலர் நெல்லிக்குப்பம் வழியாக செல்ல முயற்சித்தபோதிலும் கூடுவாங்சேரி அருகே நெரிசலில் சிக்கி தவித்தனர் . செங்கல்பட்டு- தாம்பரம் சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகின்றன.