இங்கு ஒரு மாதத்திற்கு போக்குவரத்து பாதைகள் மாற்றம்
By: vaithegi Wed, 26 Apr 2023 3:07:53 PM
சென்னை: தமிழகத்தில் சென்னையில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல ஏதுவாக முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து இந்த பணியை மேற்கொள்ள சுமார் ரூ. 300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே இதன் வாயிலாக மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போது சென்னை OMR சாலை துரைப்பாக்கம் சந்திப்பு பகுதியில் மழைநீர் வடிகால் பணி தொடங்க உள்ளது. இதனையடுத்து நாளை முதல் அடுத்த 1 மாதத்திற்கு இப்பகுதியில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதனால் உரிய பாதைகளில் வழிமுறைகளை பின்பற்றி செல்லுமாறும் போக்குவரத்து துறைக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாநகராட்சி காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.