Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தையின் கையில் சிக்கிய துப்பாக்கியால் நடந்த விபரீதம்

குழந்தையின் கையில் சிக்கிய துப்பாக்கியால் நடந்த விபரீதம்

By: Nagaraj Fri, 09 Sept 2022 09:28:37 AM

குழந்தையின் கையில் சிக்கிய துப்பாக்கியால் நடந்த விபரீதம்

கனடா: குழந்தையின் கையில் துப்பாக்கி... கனடாவின் வின்னிபிக்கில் குழந்தையொன்றிடமிருந்து கைத்துப்பாக்கியை மீட்ட போது ஏற்பட்ட விபத்தில் பதின்ம வயதுடைய சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

குழந்தையை பராமரித்துக் கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருந்த பதின்ம வயது சிறுமியே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். வீட்டில் லோட் செய்யப்பட்ட நிலையில் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை குழந்தை எடுத்து அங்கும் இங்கும் திரிந்துள்ளது. இதனைக் கண்ட குழந்தை பராமரிக்கும் சிறுமி, குழந்தையிடமிருந்து கைத்துப்பாக்கியை மீட்டு எடுக்க முயற்சித்துள்ளார். இதன் போது இருவரும் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்து இழுக்க முயற்சித்து உள்ளதாகவும், தற்செயலாக துப்பாக்கி வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

police,investigation,child,gun,girl injured ,போலீசார், விசாரணை, குழந்தை, துப்பாக்கி, சிறுமி காயம்

சம்பவம் இடம்பெற்ற போது, வயது வந்த பெண் ஒருவர் இந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற போதிலும் குறித்த வீட்டில் அனுமதியின்றி கைத்துப்பாக்கியை குறித்த பெண் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த வயது வந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறான ஓர் சம்பவத்தை தான் தனது தொழில் அனுபவத்தில் சந்தித்தது கிடையாது எனவும் இது பாரதூரமான ஓர் விளைவினை சில நேரங்களில் ஏற்படுத்திருக்கக் கூடும் எனவும் பொலிஸ் உத்தியோகத்தர் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|