பராமரிப்பு பணிகளால் இந்த இடங்களில் ரயில் சேவைகள் ரத்து
By: vaithegi Tue, 20 Sept 2022 4:27:19 PM
சென்னை : பொதுவாக ரயில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். இதனை அடுத்து அந்த வகையில் சேலம் – கரூர் மற்றும் கரூர் – சேலம் வழித்தடத்தில் நாமக்கல் வழியாக முன்பதிவில்லாத ரயில்கள் நாள்தோறும் 2 முறை இயக்கப்பட்டு கொண்டு வருகிறது.
இதையடுத்து இந்த நிலையில் சேலம் – ஈரோடு வழித்தடத்தில் இருப்புப்பாதை மேம்பாடு மற்றும் பொறியியல் பராமரிப்பு பணிகள் இன்றும் (செப்.20), நாளையும் (செப்.21) நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதே போன்று சேலம் ரயில் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இப்பராமரிப்பு பணிகளும் இன்றும் (செப்.20), நாளையும் (செப்.21) நடைபெற உள்ளன. அதனால் இந்த பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை சேலம் – கரூர், கரூர் – சேலம் இடையே இன்றும் நாளையும் ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கோவை – சேலம் ரயில் எண் 06802 ரயிலானது கோவையில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரை பகுதியாக மட்டுமே இயக்கப்படும் என்றும் ஈரோடு – சேலம் இடையே ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.