போராட்டத்தில் ரயில்கள் எரிக்கப்படுவதால் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து
By: Nagaraj Fri, 17 June 2022 11:17:06 PM
சென்னை: வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அக்னிபாத் போராட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் இந்த போராட்டம் தென்னிந்தியாவிற்கும் பரவியதை அடுத்து தெலுங்கானா
மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் சூறையாடப்பட்டது. இதனால் ரயில் சேவை
நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு
எதிரான போராட்டத்தில் 200 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 35 ரயில்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 13 ரயில் சேவை இடையே நிறுத்தப்பட்டுள்ளன. இதன்
எதிரொலியாக சென்னையில் இருந்து பீகார் செல்லும் அனைத்து ரயில்களும்
எச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிரடியாக
அறிவித்துள்ளது. இந்த வழித்தடங்களில் செல்ல முன்பதிவு செய்து இருந்த
பயணிகள் மற்றும் பதிவு செய்யாமல் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.